கவிதை – அழகிய ஆரஞ்சு நிறத் தொப்பி

கறை படிந்து நிலத்தில் கிடக்கும் ஆரஞ்சு நிற தொப்பிக்குரியவன் நேற்று மதியம் வேலையை விட்டிருக்கலாம்
அல்லது
தவறிய விதம் அறியாது இன்னும் அந்த ஒட்டக எந்திரத்தில் உழைத்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
நாம் அறியாத பண்டிகையைக் கொண்டாட நாம் அறியாத ஊருக்குச் சென்றிருக்கலாம்
அங்கு நம் நா அறியாத பண்டம் பிரபலமாய் இருக்கும்
பாதி வழியில் பயணச்சீட்டு பரிசோதகரால் இறக்கியும் விடப்பட்டிருக்கலாம்
குடிக்கத் தண்ணீர் வைத்திருந்தானோ என்னவோ?
அல்லது
நுரையீரல் நோய் கண்டு மரித்தும் போயிருக்கலாம்
இருந்தும்
கறை படிந்து நிலத்தில் கிடக்கும் அழகிய ஆரஞ்சு நிற தொப்பியே
ஓ அபூர்வமே! ஓ பரிதாபமே!
கவலையுறாதே
உனக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறது
தரமான இன்னொரு மண்டை.

Published by கிருஷ்ணா

it's me

Leave a comment